அரியலூர்,ஜன.20: அரியலூர் ரெட்கிராஸ் அலுவலகத்தில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி, அரியலூர் மாவட்டக் கிளையின் நூற்றாண்டு விழா குழு கூட்டம் மாவட்டச் செயலாளர் கலையரசன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் ஆறு ஒன்றியங்களில் இருந்தும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு நூற்றாண்டு விழா கொண்டாடுவது குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. இதில், நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் மோட்டார் சைக்கிள் தொடர்பயணம் பிப்ரவரி 6-ல் கன்னியாகுமரியில் தொடங்கி அனைத்து மாவட்டங்கள் வழியாகவும் சென்று மார்ச் 11-ல் சென்னையில் ஆளுநர் அவர்களிடம் கொடியினை கொடுத்து பேரணி முடிவடையும். இப்பேரணி பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து பிப்ரவரி 25-ல் அரியலூர் மாவட்டத்திற்கு வருகைதர உள்ளது. பேரணி ஆறு ஒன்றியங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி மாலை 5 மணி அளவில் திருச்சி மாவட்டத்திடம் ஒப்படைக்கப்படும். இப்பேரணியில் 50 மோட்டார் சைக்கிளில் பங்கேற்கவும்.