கூத்தரிசிக்கார தெருவில் குழாயில் அடிக்கடி உடைப்பு குடிநீர் வீணாகும் அவலம்

கரூர், ஜன. 20: கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் இருந்து ஜவஹர் பஜார், தலைமை மருத்துவமனை, பத்திரப்பதிவு அலுவலகம் போன்ற பகுதிகளுக்கு செல்லும் அனைத்து தரப்பினர்களும் கூத்தரிசிக்காரத் தெரு வழியாக சென்று வருகின்றனர். இந்நிலையில் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கசிவு ஏற்பட்டது. அப்போது அந்த பிரச்னை சரி செய்யப்பட்டது. இருப்பினும் நேற்றும் இதே போல் தண்ணீர் கசிவு ஏற்பட்டு சாலையில் கலந்து வருகிறது. இதனால் அனைத்து தரப்பினர்களும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் வகையில் தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: