செங்கோட்டை, ஜன. 19: செங்கோட்டையில் புறநகர் வடக்கு மாவட்ட அமமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா நடந்தது.இதையொட்டி செங்கோட்டை காந்தி சிலை முன்பு அமமுக சார்பில் அலங்கரிக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் படத்திற்கு நெல்லை புறநகர் வடக்கு மாவட்டச் செயலாளர் பொய்கை மாரியப்பன் தலைமையில் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். இதில் மாவட்ட அவைத்தலைவர் பெருமையா பாண்டியன், மாவட்ட இணைச் செயலாளர் சுமதி கண்ணன், மாவட்ட துணைச்செயலாளர் சண்முகசுந்தரம், மைமூன் பீவி, மாவட்ட பொருளாளர் அருணகிரிசாமி, தென்காசி ஒன்றியச் செயலாளர் பண்டாரம், செங்கோட்டை ஒன்றியச் செயலாளர் லியாகத் அலி, செங்கோட்டை நகரச் செயலாளர் ராமசாமி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.