பொதுமக்கள் எதிர்பார்ப்பு கரூர் ஐந்து ரோடு பகுதியில் முட்டி மோதும் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெருக்கடி

கரூர், ஜன. 19: கரூர் ஐந்துரோடு பகுதியில் பசுபதிபாளையம் மேம்பாலம் இறக்கத்தில் பாலம்மாள்புரம் பகுதியில் இருந்து வரும் வாகனங்களும், கரூரில் இருந்து செல்லும் வாகனங்களும் திரும்பி சென்று வருகின்றன. மேம்பால இறக்கத்தில் உள்ள வளைவில் வாகனங்கள் முட்டி மோதுகின்றன. பால இறக்கம் சரிவாக இருப்பதால் பாலத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் திடீரென நிற்க முடியாமல் தடுமாற்றம் அடைகின்றனர். ரவுண்டானா சிறியதாக இருப்பதால் எதிர் திசையில் இருந்து வரும் வாகனங்கள் தெரியாமல் குழப்பம் அடைகின்றனர். கனரக வாகனங்களும் இந்த வழியாக செல்வதால் ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து தடையை போக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: