திருத்தணி, ஜன. 19: திருத்தணி அடுத்த ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் யசோதம்மாள். இவர், தனக்கு சொந்தமான பசு மாடுகளை மேய்க்க நேற்று காலை அங்குள்ள ஏரி பகுதிக்கு ஓட்டிச் சென்றார். ஏரி அருகே மேய்ந்து கொண்டிருந்த பசு மாடு ஒன்று, அங்கு உருளை வடிவத்தில் சிறிதாக கிடந்த ஒரு பொருளை கடித்து சாப்பிட முயன்றுள்ளது. அப்போது அது வெடித்து வாய்பகுதி மற்றும் நாக்கு பலத்த காயம் அடைந்தது. ரத்தம் கொட்டியது.