சென்னை, ஜன.19: திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண்ணிடம் ₹27 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சென்னை சேத்துபட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜசிம்மன் (46). இவர், திருமணம் செய்துகொள்ள பெண் தேவை என்று தனியார் வெப்சைட் ஒன்றில் விளம்பரம் கொடுத்துள்ளார். இந்த விளம்பரத்தை பார்த்து ஐதராபாத்தை சேர்ந்த உமாராணி (42) என்பவர், வெப்சைட்டில் கொடுத்திருந்த முகவரி மற்றும் செல்போன் எண்ணை வைத்து ராஜசிம்மனை தொடர்புகொண்டு பேசியுள்ளார்.அப்போது, இருவரும் தங்களது விவரங்களை பகிர்ந்து கொண்டு, திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, கடந்த 6 மாதங்களாக இருவரும் செல்போனில் அடிக்கடி பேசியதால் நெருக்கம் ஏற்பட்டது.ராஜசிம்மன், தனக்கு செலவுக்கு பணம் தேவைப்படும் போதெல்லாம் உமாராணியிடம் கேட்டுள்ளார். அவரும், திருமணம் செய்யப்போகும் நபர்தானே என, அவர் கேட்கும் பணத்தை அவ்வப்போது வங்கி கணக்கில் செலுத்தி உள்ளார். மேலும், சொந்தமாக தொழில் தொடங்கப்போவதாக கூறி, அந்த பெண்ணிடம் இருந்து ₹27 லட்சம் வரை வாங்கியதாக கூறப்படுகிறது.