அகஸ்தியர் ஜெயந்தி விழா

வி.கே.புரம், ஜன.13: பாபநாசத்தில் அகஸ்தியர் ஜெயந்தி விழா நடந்தது. பாபநாசம் அகஸ்தியர் அருவி அருகேயுள்ள அகஸ்தியர் கோயிலில் அவரது ஜெயந்தி விழாவையொட்டி உலக நன்மைக்காக சிறப்பு யாகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், பூஜையும் நடந்தது. தொடர்ந்து காலை, மதியம் அன்னதானம் நடந்தது. முன்னதாக அகஸ்தியர் அருவிக்கு மேல்பகுதியிலுள்ள கோடிலிங்கேஸ்வரர் கோயில் வளாகத்திலுள்ள உலோகமுத்திரை சமேத அகஸ்தியர் கோயிலிலும் சிறப்பு பூஜைகளும் நடந்தன.  நிகழ்ச்சிகளில் ராமநாதபுரம் வெங்கடசுப்பு, கார்த்திகை கமிட்டி தலைவர் சுப்பையா, நிர்வாக கமிட்டி உறுப்பினர் முருகேசன், அம்பை காசிவிஸ்வநாத ராஜகோபுர கமிட்டி தலைவர் வாசுதேவராஜா, அரிமா சங்க சிவகுருநாதன் உட்பட ஏராளனமானவர்கள் பங்கேற்றனர்.

Related Stories: