திருச்செங்கோடு, ஜன.13: கடந்த தேர்தலில் அதிமுக வசம் இருந்த திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்தை, தற்போது திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. மொத்தமுள்ள 15 உறுப்பினர்களில் திமுக 8, காங்கிரஸ் 1, அதிமுக 5 ஆக இருந்தது. தலைவர் பதவிக்கு திமுக சார்பில் சுஜாதா தங்கவேலுவும், அதிமுக சார்பில் 7வது வார்டு உறுப்பினர் சாந்தியும் போட்டியிட்டனர். இதில் சுஜாதா தங்கவேலுவுக்கு 10 வாக்குகள் கிடைத்தன. திமுக கூட்டணிக்கு 9 வாக்குகளே இருந்த நிலையில் சுஜாதாவிற்கு 10 வாக்குகள் கிடைத்ததால், அதிமுக உறுப்பினர் ஒருவர் திமுகவிற்கு வாக்களித்தது தெரியவந்தது. இதனால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.