வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக் எரித்த நபர்களுக்கு வலை

திருவள்ளூர், ஜன. 13: திருவள்ளூர் அடுத்த சின்ன ஈக்காடு மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் ராமு (31).  தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், சம்பவத்தன்று இரவு பணிமுடிந்து வீட்டுக்கு வந்தார். வழக்கம்போல வீட்டின் முன்பு தனது பைக்கை நிறுத்திவிட்டு வீட்டை பூட்டிக்கொண்டு தூங்கினார். மறுநாள் காலை வேலைக்கு செல்வதற்காக வெளியே வந்து பார்த்தபோது, வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த பைக்கை காணவில்லை. அதை தேடியபோது, 30 மீட்டர் தூரத்தில் எனது பைக் தீயிட்டு முற்றிலும் எரிந்து காணப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில்   புல்லரம்பாக்கம்  போலீசார் வழக்குப்பதிந்து பைக்கினை தீயிட்டு எரித்த மர்ம நபர்கள் யார், சைக்கோவின் கைவரிசையா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: