அம்பத்தூர், ஜன.13: ஓய்வுபெற்ற ரயில்வே இன்ஜினியர் வீட்டை உடைத்து நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். அம்பத்தூர், காந்தி நகர், ரயில் விஹார் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (65). ஓய்வுபெற்ற ரயில்வே உதவி பொறியாளர். இவரது மனைவி கற்பகம் (58). இந்த தம்பதியினருக்கு வேளச்சேரியில் மற்றொரு வீடு சொந்தமாக உள்ளது. கடந்த 9ம் தேதி ராதாகிருஷ்ணன், வீட்டை பூட்டி விட்டு மனைவி கற்பகத்துடன் வேளச்சேரி வீட்டுக்கு சென்றார். பின்னர், நேற்று முன் தினம் காலை மீண்டும் தம்பதியினர் வீடு திரும்பினர். இவர்கள், வீட்டின் முன் கதவை திறந்து உள்ளே சென்றனர்.