திண்டுக்கல், ஜன. 13: பொங்கல் திருநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டி திண்டுக்கல்லில் நடைபெற்றது. திண்டுக்கல் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டி திண்டுக்கல் அருகே உள்ள தட்சசீல வித்யாமந்திர் பள்ளி மைதானத்தில், இந்திய சிலம்பாட்ட கழக உதவி தலைவர் மோகன் தலைமையில் நடைபெற்றது. ஆண்களுக்கான போட்டியை மாவட்ட சிலம்பாட்ட கழக தலைவர் சுந்தரராஜன் துவக்கி வைத்தார். பெண்களுக்கான சிலம்பாட்ட போட்டியை பள்ளி தாளாளர் ராமநாதன் துவக்கி வைத்தார். இதில் 14, 17, 19 வயதிற்கு உட்பட்ட மாணவ-மாணவிகள் 190 பேர் கலந்துகொண்டனர்.