மயிலாடுதுறை, ஜன.13: மயிலாடுதுறை கிளியனூரில் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெற வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்பினர் கடையடைப்பு பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய அரசியலமைப்புக்கு எதிரான குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும் நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கிளியனூரில் இஸ்லாமிய அமைப்பினர் கடையடைப்பு செய்து தேசிய கொடி ஏந்தி பேரணியில் ஈடுபட்டனர். அப்துல்காதிர் வாஹித் தலைமையில் கிளியனூரில் அகரவல்லம் பகுதியில் இருந்து துவங்கிய பேரணி முக்கிய வீதி வழியாக சென்று பெரிய பள்ளிவாசலில் முடிவடைந்தது. அங்கு கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.