திருப்பூர்,ஜன.13: திருப்பூரில் காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு நேற்று நடைபெற்றது. அதில் 1603 பேர் தேர்வெழுதினார்கள்.தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் நேற்று தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளர் பணிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் தமிழக போலீஸ் துறையில் பணியாற்றுபவர்கள் ஒரு பிரிவினராகவும், மற்றவர்கள் பொதுப்பிரிவினராகவும் பிரிக்கப்பட்டுள்ளனர். அதில் தமிழகம் முழுவதும் பொதுப்பிரிவினருக்கான எழுத்து நேற்று தேர்வு நடைபெற்றது. அதில் திருப்பூரில் குமரன் மகளிர் கல்லூரி, இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகங்களில் நடைபெற்றது.