திருவள்ளூர், ஜன. 12: திருவள்ளூர் ஒன்றியக் குழு பெருந்தலைவராக திமுக சார்பில் போட்டியிட்ட ஜெயசீலி ஜெயபாலன் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையொட்டி ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஜெயசீலிஜெயபாலன், திமுக மாவட்ட பிரதிநிதி ச.ஜெயபாலன் ஆகியோருக்கு 26 வேப்பம்பட்டு ஊராட்சி மன்ற தலைவரும் காங்கிரஸ் மாவட்டத் துணைத் தலைவருமான சதாபாஸ்கரன், வக்கீல் பாஸ்முருகன் ஆகியோர் ஆளுயர மாலை மற்றும் கிரீடம் அணிவித்து வாழ்த்தினர்.