பெரியபாளையம் அருகே கல்பட்டு ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் தள்ளுமுள்ளு: போலீஸ் குவிப்பு

ஊத்துக்கோட்டை, ஜன.12: பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம் கல்பட்டு ஊராட்சியில் ஊராட்சி துணைத்தலைவர் பதவிக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில், துணைத்தலைவர் தேர்தலில் 5வது வார்டு உறுப்பினர் நாராயணன் போட்டியிட்டார்.மேலும், கல்பட்டு ஊராட்சி தலைவர் விஜயலட்சுமி. இவரது கணவர் ெஜயவேல். விஜயலட்சுமியின் ஆதவாளர்கள் லதா மற்றும் வனரோஜா ஆகியோர் சென்று, “தலைவர் இல்லாமல் தேர்தல் நடத்தக்கூடாது” என்றனர்.

இதனால் நாராயணன் தரப்பிற்கும், ஊராட்சி தலைவர் விஜயலட்சுமியின் தரப்பிற்கும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.   இதையடுத்து20க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன்  நடைபெற்ற தேர்தலில் துணைத்தலைவர் தேர்தலில் நாராயணன் வெற்றி பெற்றார்.

Related Stories: