பெரம்பலூர்,ஜன.12:நடந்து முடிந்த ஊரக உள் ளாட்சி அமைப்புகளுக் கான தேர்தலில், பெரம்ப லூர் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்களாக மொத்தமுள்ள 8 இடங்களு க்குத் தேர்தல் நடந்தது. இதில் வார்டு வாரியாக தழுதாழை பாஸ்கர்(திமுக), மகாதேவி ஜெயபால் (திமுக), முத்தமிழ்ச்செல்வி மதியழகன்(திமுக), டாக்டர் கருணாநிதி (திமுக), குன் னம்ராஜேந்திரன்(திமுக), தேவகி வீரமுத்து (அதிமுக), பாடாலூர் சோமு மதியழ கன் (திமுக), அருள்செல்வி காட்டுராசா(திமுக) ஆகி யோர் வேற்றி பெற்றனர். இதனைத்தொடர்ந்து வேற் றிபெற்ற 8பேரும் கடந்த 6ம்தேதி மாவட்ட ஊராட்சிமன்ற அலுவலகத்தில் பதவியேற்றனர்.
இந்நிலையில் நேற்று(11ம் தேதி) மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் மாவட்ட ஊராட்சிமன்றக் கூட்ட அரங்கில் கலெக்டர் சாந்தா தலைமையில் 11மணிக்கு நடைபெற்றது. அதில் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் பதவியிடத்திற்கு 5வது வார்டு உறுப்பினர் குன்னம் ராஜேந்திரன் போட்டியிட கலெக்டரிடம் மனுதாக்கல் செய்தார். யாரும்எதிர்த்து மனு த் தாக்கல் செய்யாததால் கலெக்டர் சாந்தா குன்னம் ராஜேந்திரன் போட்டியி ன்றித் தேர்வு செய்யப்பட்ட தாக அறிவித்து வாழ்த்து தெரிவித்தார். பின் னர் மாவட்ட ஊராட்சிக்குழுதலைவராக குன்னம் ராஜேந்திரன் பதவியேற்றுக் கொண்டார்.