கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா

பாடாலூர், ஜன 12: ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பொது சுகாதாரத் துறை சார்பாக ஆரம்ப சுகாதார நிலையங்களில் தமிழர் திருநாளை முன்னிட்டு சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

அதன்படி ஆலத்தூர் கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும் துணை இயக்குனர் கீதாராணி தலைமையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் பொங்கல் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. விழாவில் கொளக்காநத்தம் ஆரம்ப சுகாதார நிலையம் நிலையத்தில் குடும்பநல அறுவை சிகிச்சை செய்து கொண்ட தாய்மார்களுக்கு பொங்கல் பானை பரிசாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கொளக்காநத்தம் வட்டார மருத்துவ அலுவலர் மகாலட்சுமி உள்ளிட்ட அலுவலர்கள் கொளக்காநத்தம் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

Related Stories: