கோவை ஜன. 12:கோவையில் வேலை செய்த நிறுவனத்தில் திருடிய பணத்தை கேட்ட நிறுவன உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்கள் 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கோவை சாய்பாபா காலனி கே.கே. புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி (52). இவர் அதே பகுதியில் ஆர்.எல்.எம். ஏஜென்சி என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிறுவனத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு துடியலூர் அடுத்த கண்ணப்பன் நகரை சேர்ந்த ஐயப்பன் (27), நவீன்ராஜ் (30) ஆகிய 2 பேர் வேலை பார்த்தனர். அப்போது இரண்டு பேரும் நிறுவனத்தில் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பணம் திருடியதாக தெரிகிறது. இதையறிந்து கேட்ட ராஜலட்சுமியிடம் இரண்டு மாதங்களில் பணத்தை திருப்பித் தந்து விடுவதாக அவர்கள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.