ஊட்டி, ஜன. 12: நீலகிரி மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி மற்றும் மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் தலைவர் பதவியை கைப்பற்றிய நிலையில், திமுக.,வினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாவட்ட ஊராட்சியில் திமுக., தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவியை கைப்பற்றியது. அதேபோல் குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களிலும் திமுக.,வை சேர்ந்த கவுன்சிலர்கள் நேற்று நடந்த மறைமுக தேர்தலில் தலைவராக தேர்வு செய்யப்பட்டனர். நேற்று பிற்பகல் நடந்த துணைத் தலைவர் தேர்தலில் ஊட்டி, கூடலூர், குன்னூர் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் துணைத் தலைவர் பதவியை திமுக., கைப்பற்றியது. இதனை தொடர்ந்து வெற்றி பெற்ற நிர்வாகிகள் ஊட்டியில் உள்ள மாவட்ட திமுக., அலுவலகமான கலைஞர் அறிவாலயத்திற்கு வந்தனர். அங்கு, மாவட்ட செயலாளர் முபராக்கை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.