கரூர், ஜன. 10: கரூர் மாவட்டம் கொக்கம்பட்டி பிரிவுச் சாலையோரம் உள்ள பழுதடைந்த நிழற்குடையை பராமரிக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கரூர் திண்டுக்கல் சாலையில் கோடங்கிப்பட்டியை தாண்டியதும் கொக்கம்பட்டி, மதுரை பைபாஸ் சாலை போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கான சாலை உள்ளது. இந்த சாலைப்பிரிவு பகுதியில் இந்த பகுதியின் வழியாக செல்லும் மினி பஸ்கள் மற்றும் திண்டுக்கல், ஈசநத்தம், பாகநத்தம் போன்ற பகுதிகளில் இருந்து கரூர் செல்லும் பேரூந்துகளில் ஏறிச் செல்லும் வகையில் நிழற்குடை அமைக்கப்பட்டது.