ஓமலூரில் காவலன் செயலி விழிப்புணர்வு

ஓமலூர், ஜன.10:ஓமலூர் அருகேயுள்ள தனியார் பள்ளியில், ஓமலூர் போலீசார் சார்பில் குழந்தைகள் மற்றும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், ஓமலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த் கலந்துகொண்டு பெண் குழந்தைகள் காவலன் செயலியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து செயல் விளக்கமளித்தார். தொடர்ந்து, பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும், தனக்கோ, மற்ற பெண்களுக்கோ ஆபத்து ஏற்படும்போது காவலன் செயலியை பயன்படுத்த வேண்டும். மேலும், தற்காப்பு கலைகள் கற்றுக்கொண்டு, விழிப்புடன் இருக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியை சேலம் மாவட்ட பசுமை தாயக துணை செயலாளர் ராதா ஜூவல்லர்ஸ் சதாசிவம்

மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories: