சென்னை, ஜன.10 : சென்னை புதுவண்ணாரப்பேட்டை காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் ராமு (37). இவர், ராயபுரம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி காமினி (32). தம்பதிக்கு ஹாசினி (7) மற்றும் ஒன்றரை வயதில் ஹசிகா என்ற 2 மகள்கள் உள்ளனர்.நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு இரவு 9 மணிக்கு ராமு வீடு திரும்பினார். குடும்பத்துடன் உணவு சாப்பிடும்போது கணவன், மனைவி இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்பிறகு இருவரும் குழந்தைகளுடன் தூங்க சென்றுவிட்டனர். நள்ளிரவு திடீரென எழுந்த மனைவி அருகில் கணவன் இல்லாததால், பக்கத்து அறைக்கு சென்று பார்த்தபோது கணவன் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறினார்.