ஆவுடையார்கோவில் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம், பொருட்கள் திருட்டு

அறந்தாங்கி, ஜன.10: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலை அடுத்த பொன்பேத்தியில் சுந்தரராஜபெருமாள் கோவில் அர்ச்சகர் சுந்தரம் மகன் மணிகண்டன் சிவாச்சாரியார் வீடு உள்ளது. சம்பவத்தன்று அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவை உடைத்து ரூ.15,000 மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்த புகாரின்பேரில் திருப்புனவாசல் காவல் உதவி ஆய்வாளர் மர்ம நபர்களை தேடி வருகிறார்.

Related Stories: