பெரம்பலூர், ஜன. 10: பெரம்பலூர் மாவட்டத்தில், குடியரசு தினத்தை முன்னி ட்டு மேற்கொள்ள வேண்டி ய முன்னேற்பாட்டுப் பணிக ள் குறித்து, அனைத்துத் து றை அலுவலர்களுடனான ஆலோசனைக்கூட்டம். மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் பெரம்பலூரில் நடைபெற்றது.பெரம்பலூர் மாவட்டத்தில் குடியரசுதினம் வரும் (26ம் தேதி) கொண்டாடப்படுவ தை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவ லர்களுடனான ஆலோசனைக்கூட்டம் நேற்று (9ம் தேதி) பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் தலை மைவகித்துப் பேசியதா வது :குடியரசு தினவிழாவை சிறப்பாக கொண்டாட ஏதுவாக அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கி ணைந்து செயல்பட வேண் டும். விழா நடைபெறும் நாளன்று காவல் துறையி னர் மூலம் காவல் துறை அணிவகுப்பு, ஊர்காவல் படையினரின் அணிவகு ப்பு உள்ளிட்டவற்றை சிறப் பாக நடத்திட காவல்துறை யினர் தகுந்த ஏற்பாடு செய் திட வேண்டும். விழா நடைபெறும் மேடை, தியாகிகள் அமரும் இடம், பயனாளி கள் அமரும் இடம் ஆகியவ ற்றிற்கு முறையான இடங் களில் சாமியானா பந்தல் அமைத்து இருக்கைகள் அமைக்க வருவாய்த்துற ஏற்பாடு செய்யவேண்டும்.