பெரம்பலூர், ஜன.9: பெரம்பலூர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் விதி த்த அபராத தொகையை செலுத்தாத கடைகளின் பதிவுச் சான்றிதழ் ரத்து செய்யப்படும் என கலெக்டர் சாந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை ஆணையாளரின் உத்தரவின்படி பெரம்ப லூர் மாவட்ட நியமன அலு வலருக்கு, உணவுப் பாது காப்புதர சட்ட விதிகளை மீறும் உணவு வணிகர்களுக்கு அபராதம் விதிப்பதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சிறு மளிகைக் கடைகள், நடமாடும் தள்ளுவண்டி கடைகள், தற்காலிகமாக கடை நடத்துபவர்களிடம் சோதனை நடத்தும்போது முதல்முறை குற்றம் புரிந் தால் ரூ1,000, 2ம்முறை ரூ 2,000, 3ம்முறை ரூ3,000 என குற்றத்துக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆண்டி ற்கு 12லட்சம் ரூபாய்க்குக் கீழ் விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் குறு, சிறு தயாரிப்பாளர்கள் முதல்முறை குற்றத்தில் ஈடுபட்டால் அபராத தொ கை ரூ.3,000, 2ம் முறை ரூ.6,000, 3ம் முறை ரூ.10,000 என அபராதம் விதிக்கப் படும்.