லாரி டிரைவர் மாரடைப்பால் மரணம்

பாடாலூர், ஜன 8: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே தனியார் தொழிற்சாலைக்கு டயர் ஏற்றுவதற்காக வந்த லாரி டிரைவர் மாரடைப்பால் மரணமடைந்தார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் கோபி (42). லாரி டிரைவராக பணியாற்றி வருகிறார். ஆலத்தூர் தாலுகா விஜய கோபால புரத்தில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலைக்கு டயர் ஏற்றுவதற்காக வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை அந்த தொழிற்சாலையின் முன்பு லாரியை நிறுத்திவிட்டு இயற்கை உபாதையை கழிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த அவரது மனைவி சசிகலா பாடாலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Related Stories: