சத்தியமங்கலம், ஜன.8: பவானிசாகர் அணைக்கு தண்ணீர் வரத்து 211 கனஅடியாக குறைந்தது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 108 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டதாகும். தமிழகத்தில் மேட்டூர் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் இந்த அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள கீழ்பவானி பிரதான வாய்க்கால், தடப்பள்ளி, அரக்கன்கோட்டை மற்றும் காளிங்கராயன் வாய்க்கால் பாசனம் என 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த நவம்பர் மாதம் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியது.
இதையடுத்து, அணையில் இருந்து பவானி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டது.