கோவை, ஜன. 8: கோவை மாவட்டத்தில் ஏராளமான சிறு குறு தொழில் நிறுவனங்கள், கடைகள், வணிக வளாகங்கள் உள்ளன. இங்கு குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்படுவதை தடுக்க குழந்தை தொழிலாளர் ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி கடந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் 500 நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.இதில் அங்கு குழந்தை தொழிலாளர்களாக பணிபுரிந்த 16 பேரை மீட்டனர். இதில் 3 பெண் குழந்தைகளும், 13 ஆண் குழந்தைகளும் அடங்கும். இது குறித்து குழந்தை தொழிலாளர் ஒழிப்புத்துறை அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:தனியார் நிறுவனங்கள், கடைகள், தொமிற்சாலைகளில் பணிபுரியும் குழந்தைகளை மீட்டு அவர்களுக்கு தேவையான கல்வி அளித்து வருகிறோம்.