சிவகங்கை சங்கர மடத்தில் பாவை விழா

சிவகங்கை, ஜன. 8:  சிவகங்கையில்  காஞ்சி சங்கர மடத்தில் காஞ்சி மகா பெரியவரின் 26வது ஆராதணையை முன்னிட்டு 13வது ஆண்டு பாவை விழா போட்டிகள் நடந்தது. பொறுப்பாளர் வைத்தியநாதன் வரவேற்றார். திருப்பாவை, திருவெண்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களை பள்ளி மாணவ, மாணவிகள் ஒப்புவித்தனர். தொடர்ந்து உலக நன்மை வேண்டி கூட்டு பிரார்த்தனை நடந்தது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், பரிசுகள் வழங்கப்பட்டது. உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கிருஷ்ணசாமி பரிசு வழங்கினார். போட்டி நடுவர்களாக சீனிவாசன், பர்வதமீனாட்சிஜெயராமன் செயல்பட்டனர். லெட்சுமணன் நன்றி கூறினார்.

Related Stories: