திருப்பரங்குன்றம் அருகே கோயிலில் பொருட்கள் திருட்டு

திருப்பரங்குன்றம், ஜன.8: திருப்பரங்குன்றம் அருகே பட்டப்பகலில் கோயில் பூட்டை உடைத்து உள்ளே இருந்த பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருப்பரங்குன்றம் அருகே உள்ள தோப்பூரை அடுத்த வயல்வெளி பகுதியில் அமைந்துள்ளது அங்காள பரமேஸ்வரி சின்ன கருப்பசாமி கோயில். இந்த கோயிலில் நேற்று மதியம் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே இருந்த குத்துவிளக்கு, எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். மாலை கோயிலுக்கு வந்த பூசாரி,பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது கோயிலில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டதால், ஆஸ்டின்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை செய்தனர். இந்நிலையில் சம்பவம் குறித்து தகவல் தெரிவித்த கிராம மக்கள் இக்கோயிலில் தொடர்ந்து மூன்று முறை கொள்ளை சம்பவம் நடைபெற்றதாகவும், இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் கூறினர்

Related Stories: