பெரம்பலூர்,ஜன.7: பெரம்ப லூர் அருகே தேசிய நெடு ஞ்சாலையில் சென்று கொ ண்டிருந்த ஹைவே பேட் ரோல் எனப்படும் நெடுஞ் சாலைத்துறை போலீஸ் ரோந்து வாகனம் மீது, பின் னால் வந்த அரசுபஸ் மோ திய விபத்தில் சாலையோ ரம் உருண்டு சென்று போலீஸ்வாகனம்கவிழ் ந்தது. இதில் எஸ்எஸ்ஐ, டிரைவர் படுகாயமடைந்தனர். விழுப்புரம் அரசு போக்குவ ரத்துக் கழகத்தைச் சேர்ந்த அரசு பஸ் ஒன்று, பாண்டிச் சேரியிலிருந்து புறப்பட்டு நேற்று காலை திருச்சி நோ க்கி சென்று கொண்டிருந் தது. கடலூர் மாவட்டம், காவிரிகுப்பம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் இளங்கோ (55) என்பவர் பஸ்சினை ஓட்டி வந்தார். பெரம்பலூர் அருகே திருச்சி சென்னை தேசிய நெடு ஞ்சாலையில், மங்கலமேடு காவல் சரகத்திற்கு உட்பட்ட வாலிகண்டபுரம் கருப்பை யா கோயில் எதிரே வேக மாக வந்து கொண்டிருந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த ஹைவே பேட்ரோல் -1 வாகனத்தின் மீது மோதியது. இதனால் ஹைவே பேட்ரோல் வாக னம் சாலையோர இடதுபுற பள்ளத்தில் கவிழ்ந்து உரு ண்டது. இந்த விபத்தில் போலீஸ் வாகனத்தில் இரு ந்த எஸ்எஸ்ஐ ரகுபதி, டிரைவர் ராமராஜ் ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.