பெரம்பலூர்,ஜன.7: பெரம்ப லூர் மதனகோபால சுவாமி கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு நடைபெற்றது. இதில் அதிகாலை 5மணியி லிருந்து பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். பெரம்பலூர் நகரிலுள்ள கு மரகதவள்ளித் தாயார் சமேத மதன கோ பாலசுவாமி திருக்கோயி லில், வைகுண்ட ஏகாதசி யை முன்னிட்டு பரமபத வா சல் திறப்பு எனப்படும் சொ ர்க்கவாசல் திறக்கும் நிகழ் ச்சி நேற்று அதிகாலை வெ கு விமரிசையாக நடைபெ ற்றது.வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு, பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோயிலில் கடந்த சில தினங்களாக பகல் பத்து நிகழ்ச்சியை முன் னிட்டு பெருமாள் கோயில் வளாகத்தில் அலங்காரத்து டன் சுற்றி வலம் வந்து அரு ள்பாலித்து வந்தார். கடந்த 5ம்தேதிஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு மூல வர் மற்றும் உற்சவ மூர்த்தி களுக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, இரவு 7 மணிய ளவில் நாச்சியார் திருக் கோலம் மற்றும் மோகினி அலங்காரத்தில் எழுந்தரு ளி பக்தர்களுக்கு அருள்பா லித்தார்.