கிருஷ்ணகிரி, ஜன.3: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 10 ஒன்றியங்களில், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களின் விவரங்கள் தெரிய வந்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 10 ஒன்றியங்கள் உள்ளன. இதில் கிருஷ்ணகிரி ஒன்றியத்தில் 20 ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கும், காவேரிப்பட்டணம் ஒன்றியத்தில் 27 கவுன்சிலர், தளி ஒன்றியத்தில் 30 கவுன்சிலர், ஊத்தங்கரை ஒன்றியத்தில் 22 கவுன்சிலர், மத்தூர் ஒன்றியத்தில் 17 கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இதே போல், ஓசூர் ஒன்றியத்தில் 16 கவுன்சிலர் பதவிக்கும், கெலமங்கலம் ஒன்றியத்தில் 19 கவுன்சிலர், பர்கூர் ஒன்றியத்தில் 30 கவுன்சிலர், சூளகிரி ஒன்றியத்தில் 25 கவுன்சிலர், வேப்பனஹள்ளி ஒன்றியத்தில் 15 கவுன்சிலர் பதவி என மொத்தம் 221 ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில், சூளகிரி ஒன்றியத்தில் 2 ஒன்றிய கவுன்சிலர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதால், மொத்தம் 219 கவுன்சிலர் பதவிகளுக்கு தேர்தல் நடந்து, ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன் விவரம் வருமாறு: தளி ஒன்றியம்: வார்டு எண் 1ல் நாகராஜ் (இ.கம்யூ), வார்டு எண் 2ல் சவுமியா (இ.கம்யூ), 3ல் பிரசாந்த் (இ.கம்யூ), 4வது வார்டில் நாகஸ்ரீ (திமுக), 5வது வார்டில் நாகவேணி (திமுக), 6வது வார்டில் அனுபா சுரேஷ் (திமுக) 7வது வார்டில் பிரபாகர் (திமுக), 8வது வார்டில் பாரதம்மா (சுயேச்சை) வெற்றி பெற்றுள்ளனர்.