ஒரே வாரத்தில் சிவப்பு எள் கிலோவிற்கு ரூ.4 உயர்வு

க.பரமத்தி, ஜன.3: ஒரே வாரத்தில் சிவப்பு எள் கிலோவிற்கு ரூ.4உயர்ந்துள்ளால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கரூர் மாவட்டத்தில் மானாவாரியாக எள், கம்பு, சோளம் சாகுபடி செய்யப்படுகிறது. இதனை வெளி மாவட்ட பகுதியில் இயங்கும் கொடுமுடி அருகேயுள்ள சாலைபுதூர் ஒழுங்கு முறை விற்பனை கூடத்திற்கு கொண்டு செல்கின்றனர். நேற்று முன்தினம் 5702கிலோ எடைக்காக நடந்த ஏலத்தில் சிவப்பு எள் குறைந்த விலையாக கிலோ ரூ.98க்கும் அதிக பட்சம் ரூ.128க்கு ஏலம் போனது. கடந்த வாரத்தை விட கிலோவிற்கு ரூ.4உயர்ந்து ஏலம் போனதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதே போல வெள்ளை எள் குறைந்த விலையாக கிலோ ரூ.86க்கும் அதிக பட்சம் ரூ.124க்கு ஏலம் போனது. கடந்த வாரமும் இதே விலைதான மாற்றம் இல்லை.

Related Stories: