திருக்காட்டுப்பள்ளி, ஜன. 3: திருக்காட்டுப்பள்ளி குடமுருட்டி பாலம் அருகில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை விரைந்து சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் வலியுறுத்தினர்.150 ஆண்டுகளுக்கு முன்பே திருக்காட்டுப்பள்ளியில் காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் அமைத்து ஆறு காவிரி, குடமுருட்டி என்று இரண்டாக பிரிந்து செல்கிறது. பழமையான இப்பாலத்தின் வழியாக திருக்காட்டுப்பள்ளியில் இருந்து திருவையாறு, பூண்டிமாதா கோயில், கல்லணை, கும்பகோணம், லால்குடி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கும், அப்பகுதிகளில்இருந்து வரும் வாகனங்கள் திருக்காட்டுப்பள்ளி, செங்கிப்பட்டி, தஞ்சை, புதுக்கோட்டை பகுதிகளுக்கும் சென்று வந்தன.