தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரிக்கை முத்துப்பேட்டை சாலையில்

திருத்துறைப்பூண்டி, ஜன.3: திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை சாலையில் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் திரண்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உள்ளாட்சி தேர்தலில் 32 ஊராட்சி மன்ற தலைவர், 16 ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஒரு மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கான நடைபெற்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று காலை திருத்துறைப்பூண்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதனால் நேற்று காலை முதல் திருத்துறைப்பூண்டி - முத்துப்பேட்டை சாலையில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டது. ஆனால் பொதுமக்கள் திருத்துறைப்பூண்டி வேதை சாலையிலிருந்து வாக்கு எண்ணும் மையம் வரை வேட்பாளர்களுக்கு ஆதரவாக வந்தவர்கள் சாலையை அடைத்து நின்றனர். இதனால் நகர பகுதியில் உள்ளவர்களும், இந்த வழியாக செல்பவர்களும் மிகுந்த சிரமப்பட்டனர். எந்த வாகனமும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.இது குறித்து தகவலறிந்த மாவட்ட எஸ்பி துரை நேரடியாக வாக்கு எண்ணும் மையத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு பின்னர் சாலையை போக்குவரத்திற்கு இடையூறாக நின்றவர்களை வெளியேற்ற உத்தரவிட்டதை தொடர்ந்து அனைவரும் அங்கிருந்து சென்றனர்.

Related Stories: