நாகர்கோவில், ஜன. 3: நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் பாதாளசாக்கடை பணி நடந்து வருகிறது. பாதாளசாக்கடைக்கு போடப்படும் மேன்ஹோல்கள் மூடிகள் உரிய தரமில்லாமல் போடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோர்ட் ரோடு பகுதியில் போடப்பட்டு இருந்த மேன்ஹோல்மூடி உடைந்து காணப்பட்டது. பின்னர் போராட்டம் நடத்திய பிறகு அந்த மேன்ஹோல் மூடி புதிதாக போடப்பட்டது. அண்ணாபஸ் நிலையத்தில் இருந்து கோட்டார் சவேரியார் ஆலயம் ஜங்சன் பகுதி வழியாக பல வாகனங்கள் சென்று வருகிறது.