அரவக்குறிச்சி, டிச. 31: பனிக்காலங்களில் செம்மறி ஆடுகளுக்கு பல் வேறு நோய்கள் ஏற்படும். இதனால் ஆடு வளர்க்கும் விவசாயிகளுக்கு பொருளாதார நஷ்டம் ஏற்படும். இதிலிருந்து பாதுகாக்க செம்மறி ஆட்டு பட்டி பராமரிப்பு முறைகள் பற்றி விழிப்புணர்வு கருத்துக்களை ஆடு வளர்க்கும் விவசாயிகளுக்கு கால் நடை பராமரிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர். அரவக்குறிச்சி பகுதியில் விவசாயம் மட்டுமல்லாமல் ஏராளமான விவசாயிகள் ஆடு வளர்த்து ஜீவனம் நடத்தி வருகின்றனர். தற்போது அரவக்குறிச்சி பகுதியில் மழையை தொடர்ந்து பனிக்காலம் தொடங்கியுள்ளது. தற்போது பனி ஆரம்ப காலத்திலேயே அதிகமாக உள்ளது. இதனால் செம்மறி ஆடுகளுக்கு பல் வேறு நோய்கள் ஏற்படுகின்றது. இதனால் கால்நடைகளுக்கு உயிரிழப்பு ஏற்பட்டு விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகின்றது. பனிக்கால நோய்களிலிருந்து ஆடுகளை பாதுப்பது மற்றும் பராமரிப்பது எவ்வாறு என்பது பற்றி கால் நடை பராமரிப்புத் துறையினர் கூறியதாவது: தற்போது பனிக்காலம் ஆரம்மாகியுள்ளது. பனி அதிகமான காலங்களில் செம்மறி ஆடுகளை பனிக்கால நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கு ஆட்டுப் பட்டி பராமரிப்பு மிக முக்கியாகும். பட்டி சரியாக அமைக்காவிட்டால் சளி, இருமல், வாய்புண் நோய், புழு புண், குட்டிகளில் வளர்ச்சி குன்றுதல் காரணமாக ஆடுகள் இறந்து போக வாய்ப்புள்ளது. இதனால் ஆடு வளர்க்கும் விவசாயிகளுக்கு பொருளாதார நஷ்டம் ஏற்படும்.