ஈரோடு, டிச.30: ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் ரயில்வே போலீசார் நேற்று முன்தினம் பயணிகளின் உடமைகளையும் சோதனையிட்டனர். ரயில்களிலும் சோதனை நடத்தினர். குர்லா எக்ஸ்பிரஸ் ரயிலில் சோதனை செய்தபோது சந்தேகப்படும்படியாக இருந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை
நடத்தினர். அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதையடுத்து அவரை பிடித்து ரயில்வே போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த நபர் வங்கதேச டாக்கா மாவட்டம் ஜோஸ்கிரி கியம்கோலா பகுதியை சேர்ந்த உஜ்ஜல்குமார் டாடா(29) என்பது தெரியவந்தது.