உடுமலை,டிச.30: உடுமலையில் கழுதைப்பால் 50 மில்லி 50 ரூபாய்க்கு விற்கப்பட்டது.உடுமலை பகுதியில் உள்ள கிராமங்களில், கடந்த சில தினங்களாக திருச்சியில் இருந்து வந்துள்ள சிலர், கழுதைகளுடன் கிராமம், கிராமமாக சென்று பால் கறந்து விற்கின்றனர்.முன்பு ஒரு சங்கு பால் 50 ரூபாய்க்கு விற்ற நிலையில், தற்போது கொஞ்சம் மவுசு குறைந்து 50 மில்லி 50 ரூபாய்க்கு விற்கின்றனர். இதை பலரும் ஆர்வமுடன் வாங்கி தங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கின்றனர்.