கெங்கவல்லி, டிச.30: கெங்கவல்லி பகுதியில் பருத்தி செடியில் நோய் தாக்குதலால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே வீரகனூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 ஆயிரம்ஹெக்டேர் பரப்பளவில் நடப்பு பருவத்தில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். பருத்தி நன்கு வளர்ந்து பூ பிடித்து காய் காய்த்து அறுவடைக்கு தயாராகி வரும் நிலையில், தற்சமயம் செடிகளில் சாம்பல் நோய் தாக்கம் அதிகமாக பரவி வருவதாக விவசாயிகள் கவலைதெரிவிக்கின்றனர். இந்த நோய்தாக்குதலுக்குள்ளான செடிகள், இலைகள மற்றும் சபைகள் உதிர்ந்து மகசூல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.