பெரம்பலூர், டிச.30: பெரம்பலூரில் தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பாக மின்வாரியத்தில் கேங்-மேன் பணிநியமன எழுத்துத் தேர்வுக்கான பயிற்சி முகாம். 280பேர் பங்கேற்றனர். தமிழக அளவில் மின்வாரியத்தில் கம்பம் நடுதல், கம்பிகளை இழுத்துக் கட்டுதல், புதியமின் பாதைகளை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேங்-மேன் காலிப் பணியி டங்களை நிரப்புவதற்கு விண்ணப்பித்தவர்களில் அழைப் பாணை அனுப்பி வைக்கப்பட்ட நபர்களுக்கு கடந்த 9ம் தேதி முதல் 18ம் தேதிவரை உடல் தகுதித் தேர்வு மாநில மெங்கும் நடத்தப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் 4 ரோடு அரு கேயுள்ள தமிழ்நாடு மின் வாரிய மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்தில் கேங்-மேன் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான உடல்தகுதித் தேர்வு, மின் வாரிய மேற்பார்வைப் பொ றியாளர் சுப்பையா மேற்பா ர்வையில் நடந்தது. அதில் 9 நாட்களில் பங்கேற்ற மொத்தம் 1,050 பேர்களில் பல் வேறு விதிகளின் அடிப்ப டையில் 396பேர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.