தஞ்சை, டிச. 30: தஞ்சை பள்ளியக்ரஹாரத்தில் இருந்து பனவெளி- தென்பெரம்பூர் செல்லும் வெண்ணாற்றங்கரை சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலை புதிதாக அமைக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். தஞ்சை அருகே பனவெளி, வெண்ணாற்றங்கரை சாலை வழியாக பனவெளி, தென்பெரம்பூர், அரசகுடி, அள்ளூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லலாம். மேலும் நகரத்துக்குள் வராமல் பைபாஸ் சாலைக்கு செல்லும் வழியாகவும் இருந்து வருகிறது. இந்த சாலையை 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். 2006ம் ஆண்டு பள்ளியக்ரஹாரம்- பனவெளி- தென்பெரம்பூர், வெண்ணாற்றங்கரை சாலையில் புதிதாக தார் சாலை அமைக்கப்பட்டது. தற்போது அந்த சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு தகுதியற்ற நிலையில் உள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் புகார் மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை.