ஒரத்தநாடு, டிச. 30: ஒரத்தநாடு, திருவோணம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையங்களில் கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார். ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையமான அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருவோணம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வாக்கு எண்ணும் மையமான ஊரணிபுரம் வெட்டுவாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு செய்தார். அப்போது அங்கு அமைக்கப்பட்டு வரும் தடுப்பு வேலிகள், பாதுகாப்பு அறையில் வாக்குப்பெட்டிகள் வைக்கப்படவுள்ள இடம், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஊராட்சி மன்ற உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு தனித்தனியாக வாக்கு எண்ணும் மையங்கள் அமைந்துள்ள இடம் மற்றும் வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும் தண்ணீர் வசதி, கழிவறை வசதி, பாதுகாப்பு வசதியை பார்வையிட்டார்.