திமுக முன்னாள் எம்எல்ஏ தேவராஜன் மரணம்

பெரம்பலூர்,டிச.28: பெரம்பலூர் தொகுதி திமுக முன்னாள் எம்எல்ஏ டாக்டர் மு.தேவராஜன் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார்.பெரம்பலூர் மாவட்டத்தின் மூத்த திமுக பிரமுகரான டாக்டர் மு.தேவராஜன்(68). பெரம்பலூர் ஒன்றியச் செயலாளராக பதவி வகித்தவர். இவர் கடந்த 1996-2001வரை பெரம்பலூர் சட் டமன்றத் தொகுதியில் திமுக சார்பாகப் போட்டியிட்டு, வெற்றிபெற்று எம் எல்ஏவாக பதவிவகித்தவர்.பெரம்பலூர் அருகே உள்ள களரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த இவர். பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் மனைவி டாக் டர் புவனேஸ்வரியுடன் குடியிருந்து வந்தார்.கடந்த 2018ம் ஆண்டு நோயினால் பாதிக்கப்பட்ட தேவராஜன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில்நேற்றுகாலை 7மணிக்கு மரணமடைந்தார். அவரது உடலுக்கு திமுக முன்னாள் மத்தியஅமைச்சர் ராசா, முன்னாள் அமைச்சர் நேரு, பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் குன்னம் ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏக் கள் துரைசாமி, அண்ணா துரை உள்ளிட்ட திமுகவின ரும் அனைத்துக்கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். தேவராஜனின் உடல் திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதன் அரசு மருத்துவ கல்லூரிக்கு தானமாக வழங்கப்படுமென அறிவிக்கப் பட்டதால்,

இறுதி அஞ்சலிக்குப் பிறகு அவரது உடல் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Related Stories: