கொள்ளிடம், டிச.29: நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்தில் நேற்று உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
கொள்ளிடம் ஒன்றிய 20 வது வார்டு ஒன்றியக்குழு உறுப்பினருக்கு அதிமுக கூடணியின் தேமுதிக வேட்பாளராக ஜலபதி என்பவரும் தி.மு.க வேட்பாளராக அங்குதன் மற்றும் 4 சுயேட்சை வேட்பாளர்கள் உள்ளிட்ட 6 பேர் போட்டியிடுகின்றனர். 20 வது வார்டைச் சேர்ந்த கூழையாறு கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் மொத்தம் பதிவான வாக்குகள் 660 ஆகும். இந்நிலையில் சில வாக்குச்சீட்டுகளில் தேமுதிக வின் முரசு சின்னம் விடுபட்டிருப்பதை வாக்காளர்கள் கண்டுபிடித்தனர். இதனால் தேமுதிக வேட்பாளர் மற்றும் அ.தி.மு.க வினர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் வாக்குசாவடியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து மாவட்ட கலெக்டர் பிரவீன்நாயரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.