குளித்தலை, டிச. 29: கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி அண்ணாநகர் 20வது வார்டு பகுதி பொதுமக்கள் குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குளித்தலை காவல் நிலையத்தில் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளிக்க வந்தனர்.
அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது: குளித்தலை நகராட்சி 20வது வார்டு அண்ணா நகரில் ஏராளமானோர் வசித்து வருகிறோம். அப்பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், அரசினர் மாணவர் விடுதி, தனியார் மருத்துவமனை, நகர கூட்டுறவு வீடு கட்டும் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் உள்ளது. இந்நிலையில் இப்பகுதியில்செல்போன் டவர் அமைக்க தீவிரமாக ஏற்பாடுகள் நடந்து வருகிறது என அறிகிறோம்.