வேலாயுதம்பாளையம் அருகே பதுக்கி வைத்து மது விற்றவர் கைது

வேலாயுதம்பாளையம், மே 26: கரூர் மாவட்டம் வள்ளிபாளையம் தனியார் தாபா ஓட்டல் அருகில் ஒருவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்துக் கொண்டு விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்த்த போது அங்கு ஒருவர் மது பாட்டில்களை விற்பனை செய்து கொண்டிருந்தார். அதன் அடிப்படையில் தளவாபாளையம் கடைவீதி பகுதியைச் சேர்ந்த திருப்பதி (49) என்பவரை கைது செய்து அவர் விற்பனைக்கு வைத்திருந்த 5 மது பாட்டில்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வேலாயுதம்பாளையம் அருகே பதுக்கி வைத்து மது விற்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: