மேலூர், டிச. 25: விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனைகளுடன் மேலூர் அருகே உள்ள சிவாலயத்தில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. மேலூர் அருகில் உள்ள தும்பைப்பட்டி சிவாலயபுரத்தில் அமைந்துள்ள சங்கரலிங்கம், சங்கரநாராயணசுவாமி, கோமதியம்மாள் கோயிலில் மார்கழி மாத தேய்பிறை பிரதோஷ சிறப்பு வழிபாடு மற்றும் சிறப்பு அர்ச்சனை, அலங்கார வழிபாடுகள் நேற்று நடைபெற்றது.