கரூர், டிச. 25: ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்படுவது குறித்து கரூர் கலெக்டர் அன்பழகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு அரசு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் மதுக்கூடங்கள்) கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு வாணிபக் கழக கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் எப்எல்3 உரிமம் உள்ள ஓட்டல்கள், எப்எல்2, எப்எல்11, (எப்எல்6 தவிர) ஆகியவை தமிழ்நாட்டில் இரு கட்டங்களாக நடைபெறும் தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் 2019ஐ முன்னிட்டு இன்று (25ம்தேதி) மாலை 5மணி முதல் 27ம்தேதி மாலை 5மணி வரையிலும்,